வெந்நிலம் தோய்க்கும் வானின் நீர்த் துளி!....
ஈரம் தின்னும் மண்ணின் வேட்கைக்கு....
கிளை அசைத்து இலை உதிர்ப்பாயென....
அலையும் ஊசலை தீண்டா தென்றலே!....
உதிரம் மறந்து உள்ளம் குலைந்து....
கரையினைத் தீண்டி ஒடுங்கும் அலையாய்....
கருமணி பொரித்த நிலவின் கதிரினை....
ஏங்கும் இருளுக்கு நீ மின்னொளித்திடுவாயா...!