உன்னை பார்த்து என் விழி வியக்க, உன் சிரிப்பால் என்னை சிறைப்பிடிக்க,
என் கண்கள் அதை படமெடுக்கஅனைத்தும் உண்மை தானே அண்பே!
பிறகு இன்று எனை பார்த்தவுடன் உன் முகம் மறைக்க,
இதழ் புன்னகை தவிர்க்க, காரணம் என்ன கண்ணே!
இதுவரை புரியாத புதிராகவே நான் வாழ்ந்து விட்டேன்,
நீயும் புதிர்போடாதே! புதுமை பெண்ணே!
ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம் ஓரப்பார்வையிலாவது பேசு!
காயத்ரி ரவிச்சந்திரன்