இரு முகங்கள் ஏனோ

உலகம் என்ற மேடையில் உடன் பயணிக்கும் உறவுகள்
வேஷம் களையும் போது புலனாகிறது அனைவரும் நல்ல நடிகர்கள் என்று
ஏனோ எனக்கு புலனாகவில்லை வேஷம் கலையும் வரை
நடந்தது நாடகம் என்று அகத்திற்கு திரைபோட்டு முகத்திற்கு முகமூடியிட்டு
உணர்வுகளை மிதித்து உறவுகளை வளர்க்கும் இவர்கள் தோழர்களாம்...
பொய்யான நேசங்கள் போலியான முகங்கள் இவற்றில் எது உண்மை என்று
தவிக்கின்றது என் நிஜங்கள் வாழ்ந்த நாட்களும் எண்ணிப் பார்க்கிறது
பழகிய நாட்களில் எது நிஜம் என்று! நானும் தேடுகிறேன் தொலை தூரம் தூரமாய்
நேசித்த உறவுகள் எங்கே என்று! நம்பிய உறவுகள் எங்கே என்று! 
பார்த்திடத் தூண்டும் முகங்களை விட நினைத்திடத் தூண்டும் முகங்கள் எங்கே என்று!
உணர்வுகளை உணராத உறவுகள் தேவைக்காக பழகும் உறவுகள்
இவைகளுக்கு நான் குப்பை போன்று தான் என் அன்புமும் பயனற்றது தான் போலி முகங்களே...
உன் வாழ்க்கை எனும் ஓடம் ஓடிட என்னை ஓடை ஆக்குவது ஏனோ?
நிஜத்தின் மறுமுகம் போலியாகிட-இங்கு போலியே நிஜமாக வாழ்வது ஏனோ?
பொய்மைக்கு தெரியாது நான் உண்மை என்று என் அன்பும் போலி இல்லையென்று
என் கண்கள் கலங்குகின்றது பொய்யோடு நீ ஏன் வாழ்கிறாய் என்று? போலி முகங்களே...
நீங்கள் நடித்து வாழ்வதைவிட உங்களை மாய்த்து வாழுங்கள்.
பிரின்ஸ் ஜோர்வின் (ஜோஜோ)
Poetry Competition 
Previous Post Next Post