வாசல் வரை வந்தவளே; உள்ளே வர என்ன தயக்கம்...?
'இறந்த என்னை' பார்க்க- உனக்கு மனம் வர வில்லையா?
இல்லை... இறந்த பின்னும் 'என்னை' பார்க்க- உனக்கு
மனம் வர வில்லையா? காரணம் எதுவாக இருந்தாலும்
சரி; என் அருகில் வந்து விடாதே. உன் மூச்சு காற்று பட்டால்...
நான் எழுந்து விடுவான். ஒரு முறை இறந்ததே
போதும்; மீண்டும் இறக்க எனக்கு விருப்பம் இல்லை...!