பெண் - கவிதை போட்டி

 அவள் பேச தயங்கினால் ஊமை என்றும்;

பேசினால் வாயாடி என்றும்; சிரிக்க தயங்கினால் முசுடு என்றும்;

சிரித்து விளையாடினால் அடக்கம் இல்லாதவள் என்றும்;

அவள் வெளியுலகம் அறியாதவளாய் இருந்தால் பேதை என்றும்;

வெளியுலகம் அறிய உலகம் உலாவ நினைக்கும் பெண்ணை ஊர் சுற்றி என்றும்;

இந்த சமுதாயத்தில் இரு தரப்புகள் பெயரிட்டு கொண்டே தான் இருக்கிறது

இந்த இரு தரப்புகளுக்கு நடக்கும் பெயர் சூட்டும் போட்டியில்

"பெண்" என்னும் தலைப்பு கொடுத்த மஹான் யாரோ!!

இப்படிக்கு, இந்த போட்டியின் விதிமுறை புரியாத, நான்.

பெண்
Rajahpriya Murugan
                                                                  Poetry Competition


Previous Post Next Post