நட்பு ஒரு கோவில் - கவிதை போட்டி

 நட்பு  *காதல் தேவன் காலையில் பூத்தான்💜....! 

ஆனால் நட்பு தேவன் நம்பிக்கையில் பூத்தான்...😁!

 காலையில் எழுந்து கண்கள் மூடினால்

 காற்று போல் நட்பு நம்மை நாடும் ...! 

சிரிக்கும் போது சிப்பிக்களாய்....! 

சிந்திக்கும் போது சிற்பிக்களாய்...! 

அழுகும் போது ஆறுதல் சொல்லும் அனுபவசாலிகளாய்...! 

நம்பிக்கை ஊட்டும் நட்சத்திர நாயகிகளாய்...! 

என்றும் எப்போதும் என்னை பற்றி எனக்காக 

எதுவும் செய்வது அளவிட முடியாத நட்பு ஆகும் ...! 

தைரியமாக கண்கள் மூடி நடக்கலாம்...

பாதுகாப்பாக கூட்டி செல்ல நட்பு இருக்கும்....!

கனவுகள் திறக்க,வானம் பறக்க நட்பினால் மட்டும் முடியும்...!!

😁எனவே நட்பை மதித்து நட்பு வழியில் சென்று 

நம்பிக்கையில் பயணம் செய்து நாளும் 

வெற்றி பெறுவோம்😍....!!!!!! நட்பு ஒரு கோவில்* ❤️

Previous Post Next Post