மின்னல் அடிக்க மேகங்கள் முட்டி மோதி..
இறைத்தது மழையை பூமிக்கு...
வாய்க்கால் வழிந்தோட வாய்க்கால் வழிந்தோட
குளங்கள் நிரம்பி ஆட.. ஆறு கடலைத் தேட...
ஏரிகள் அளவை தாண்ட... பத்துகள் செழிக்க..
பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி..
சூரிய ஒளி பச்சையத்தை சூடாக்க.
அறுவடை அறுத்து..அரிசியாக்கி
பொங்கல் வைத்து பொங்கலோ
பொங்கலோ பொங்கல் தமிழர் திருநாள்