நட்பு என்பது பரந்த வானம் - கவிதை போட்டி

 சொந்தங்கள் என்பது பனி துளி போன்றது

சிறு பொழுதில் மறைந்து விடும். 

நட்பு என்பது பரந்த வானம் போன்றது 

உன்னை சுற்றி எப்போதும் நிலைத்து நிக்கும்.

வலிகள் கூட நொடிப்பொழுதில் மறைந்து விடும்.

உன்னை சுற்றி நல்ல நண்பர்கள் இருப்பார்கள் என்றால்.

ஆயிரம் விண்மீன்கள் ஆகாயத்தில் பிரகாசித்தாலும்

இரவுக்கு அழகு நிலவும் தான். அதே போலத்தான் ஆயிரம்

உறவுகள் மண்ணில் இருந்தாலும் வாழ்க்கைக்கு

அழகு உண்மையான நட்பு தான்.

நட்பு மற்ற உறவுகளை விட மிகவும் வித்தியாசமானது

இறக்கும் வரை பிரிக்க முடியாதது தான் நட்பு.

நட்பின் துரோகம் மிகக் கொடூரமானது எக்காரணம்

கொண்டும் அதை செய்து விடாதீர்கள் அதற்கு

வாழ்நாளில் பாவ மன்னிப்பே கிடைக்காது. 

AJITHKUMAR.P
Previous Post Next Post