என் தாயே - கவிதை போட்டி

சுமையாக எண்ணாமல் என்னை சுகமாக நினைத்து சுமந்தாயே!

பத்து மாதமும் என்னை பொக்கிஷமாக பாதுகாத்தாயே!

உன் வலிகளை பாராமல் என்னை உலகத்திற்கு கொண்டு வந்தாயே!

இமை கூட அசையாமல் என்னை ஈ எறும்பு தீண்டாமல் காத்தாயே!

ஈடு இணையில்லா அன்பை எனக்கு இமை பொழுதெல்லாம் தந்தாயே!

பல துன்பங்களை கடந்து என்னை பாரமென்றும் கருதாமல் வழத்தாயே!

நான் இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீதான் என்றும் என் தாயே!


 Kasthuripoovalingam 

Previous Post Next Post